தமிழக அரச்சின் சமீபத்திய உத்தரவு ஒன்று அநேகருக்கும் தெரிந்திருக்கும்.
வரும் ஜூன் 1 ந்தேதி முதல் தலைக் கவசம் [ஹெல்மெட்] கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
இரு சக்கர வாகன ஓட்டிகள் அவசியம் லைசென்ஸுடன் இனி கவசத்தையும் சுமக்க வேண்டும்.
கடந்த வருடத்தில் மட்டும் சாலை விபத்துக்கள் சுமார் 4500 உயிர்களை பலி கொண்டிருப்பதாக அரசுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து 'டெக்கான்'என்கிற நுகர்வோர் அமைப்பு நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறது.ஆணையை எதிர்த்து அல்ல.மத்திய அரசின் ஒரு ஆணையை அமலாக்கி ,அதன் மூலம் பல நுகர்வோர் பயன் பெறவே கோர்ட்டுக்குப் போயிருக்கின்றனர்.
இப்பவெல்லாம் தொலைக்காட்சி விளம்பரங்களில் பொருட்களின் மீதான வரி ஏய்ப்பை நுகர்வோர் அறியும் படி ஒரு சில விளம்பரங்களைக் காணலாம்.'ஜஹாஓ கிருஹக் ஜஹாஓ' என்ற இந்தி
வார்த்தையின் தமிழாக்கமாக,'விழித்திருங்கள் நுகர்வோரே விழித்திருங்கள் 'என்று வரும்.
உப்புக்கும் மளிகைப் பொருட்களுக்கும் விழித்திருக்கச் சொல்லும் மத்திய,மாநில அரசுகள் முக்கியமான ஒரு அரசாணை விஷயத்தில் இதுவரை தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது என்பது
'டெக்கான்'அமைப்பு கோர்ட்டுக்குப் போகும் முன்னால் எத்தனை பேர் அறிந்திருப்போம் என்பது தெரியாது. 2005 செப்டம்பர் மாதம்மத்திய மோட்டார் வாகன சட்டம் 138-f ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அதில் ஒரு வாடிக்கையாளர் இரு சக்கரவாகனம் வாங்கும் போது அத்துடன் ஹெல்மெட்டையும் உற்பத்தி செய்த நிறுவனம் தர வேண்டும் என்பதுதான் அது.அதுவும் இந்திய அரசின் தரக் காட்டுப் பாட்டு விதிப்படியான தரத்துடன் இருத்தல் வேண்டும்.
வாகனத்துடன் சீட்,டயர் போன்றவைத் தரப் படுவது போலவஇலவசமாகவேத் தரப்பட வேண்டும்.உற்பத்திச் செலவுடன் விலையைக் கூட்டக் கூடாது.இது ஏப்ரல் 2006 லிருந்து நடைமுறைப் படுத்தப் பட வேண்டும் என்பது சட்டம்.
ஆனால் இன்றைய தேதிவரை எந்த நிறுவனமும் அதைக் கடைபிடிக்கவில்லை.நுகர்வோர் அமைப்புகளும் கண்டு கொள்ளவில்லை.
இப்போது கட்டாயமாக தலைக் கவசம் வேண்டுமென்பதால் இது கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட இருக்கிறது.
2004 லிலேயே சட்டம் போடப்பட்டதால் அன்றிலிருந்து இன்றுவரை விற்பனையான அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் [சுமார் 19 லட்சம்]ஹெல்மெட்டுகளை வழங்க வேண்டும்.இனி தயாரித்து வரும் வாகனங்கள் ஹெல்மெட்டுடனே வர வேண்டும் என்பதுதான் அவர்கள் தரப்பு வாதம்.
மேலும் இனி வாகனங்களுடன் அளிக்கப்படக் கூடிய இலவச உதிரி பாகங்களின் விபரங்களும் அளிக்கப்பட வேண்டும்.
டீலர்களிடம் கேட்டால் இனி நுகர்வோர் வற்புறுத்தினால் நாங்கள் கம்பெனியிடம் சொல்வோம் என்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை இது குறித்து எந்த அரசியல் கட்சியும் குரல் எழுப்பியதாகத் தெரியவில்லை.தங்களுக்கு ஆதாயமான விஷயங்களுக்குத் தொண்டர்களை உசுப்பி விடும் சுயநல அரசியல்வாதிகள் மக்களின் உயிர் பாதுகாப்புக்குத் தேவையான ஒரு பொருளின் அவசியத்தை உணராமல் மெத்தனமாக இருக்கின்றனர்.
தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர்,'இது கடந்த ஆட்சியின் குறைபாடு.இப்போதுதான் கவனத்திற்கு வந்திருக்கிறது ஆவன செய்வோம் 'என்கிறார்.
மக்கள் உயிர் பிரச்சனை எனும் போது கூட ஆளுங்கட்சி,எதிர்கட்சி என ஏலம்போடும் சமூக அமைப்பில் இருக்கும் நாம் எப்போது விழிப்பது?
இது போன்ற நுகர்வோர் அமைப்புகள்தான் நம் உரிமையைப் போராடி பெற்றுத்தர வேண்டும்.
Tuesday, March 06, 2007
Monday, March 05, 2007
ரிலையன்ஸ் ஃபிரஷ்..காய்கறிகள்
ஆட்டக்கடிச்சி,மாட்டைக் கடிச்சி கடைசியிலே மனுஷனைக் கடிச்ச கதைன்னு சொல்றது போல
பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.
பெட்ரோலியம்,கெமிக்கல்ஸ்,தொலைத் தொடர்புன்னு தன் வர்த்தகத்தை விரித்து வைத்திருந்த ரிலையன்ஸ் குழுமம் இப்போது காய்கறி மார்க்கெட்டிங்கிலும் கால் பதிக்கத் தொடங்கி விட்டது.
'ரிலையன்ஸ் ஃபிரஷ்' என்ற பெயரில் சென்னையில் 12 இடங்களில் காய்கறி விற்பனை நிலையங்களை பிப்ரவரியிலிருந்து தொடங்கி விட்டது.
இதனால் சுமார் ஒரு லட்சம் சில்லறை வியாபாரிகள் பாதிக்கப் படுவர் என வியாபாரிகள் அச்சப் படுகின்றனர்.
இது பற்றி கோயம்பேடு மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவ்ர் கூறுகையில்,''சென்னை முழுக்க மொத்தம் 120 மார்க்கெட்டுகள் உள்ளன.சில்லறை வியாபாரிங்க 1000 ரூபாய்க்கு சரக்கு வாங்கி,ஏத்துக்கூலி,வண்டி வாடகை ,எறக்குக் கூலின்னு பல செலவுகளை கணக்கிட்டு காய்கறி மேல் இலாபம் வைத்து விற்றால் 300 வரை தினம் லாபம் பார்ப்பர்.இவங்க வந்து 'மலிவு விலை'ன்னு வித்தா எங்க கதி என்னாகும்'' என்கிறார்.
முதல் கட்டமாக 12 கடைகளை சென்னையில் திறந்த ரிலையன்ஸ் நிறுவனம் ,தமிழ்நாடு முழுக்க 100 கணக்கில் கிளைகளை விரைவில் திறக்கப் போகிறார்களாம்.
திண்டுக்கல் பகுதியிலிருந்து மொத்தமாக விவசாயிகளிடம் நேரடிக் கொள்முதுல் செய்வதாகச் சொன்னாலும் ,இன்றுவரை கோயம்பேடில்தான் வாங்குவதாகவும் குற்றச் சாட்டு நிலவுகிறது.
இது குறித்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவ்ர் வெள்ளையன் கூறும்போது,''இப்படித்தான் ஒரு காலத்துல வியாபாரம் செய்ய நவாப்பிடம் அனுமதி கேட்டு
வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழைஞ்சான்.அவனுடைய ஆக்கிரமிப்பப் பார்த்த நவாப் தளபதியிடம் அவர்களை என் காலடியில் கொண்டுவந்து போடுங்கன்னு சொன்னதும் ,தளபதி நவாப்பையே வெள்ளைக்காரன் காலடியில போட்டு அடிமையாக்கினான்.அது போலத்தான் இருக்கு இதுவும்.'ஏகபோக தொழில் வணிகச் சட்டங்கள்' தெரியாத்தால்தான் அரசாங்கம் இதுக்கு அனுமதி கொடுத்திருக்கு.சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பேரில் சலுகை தந்து,சில்லைறை வியாபாரிகள் வயித்துல அடிக்கிறாங்க'' என்கிறார்.
கோடிக் கணக்கில் பணம் புரளும் பல வர்த்தகத் துறைகளில் கால் பதிக்கும் ரிலையன்ஸ் எளிமையான முறையில் குறைந்த முதலீட்டில் காய்கறி வாங்கி அன்றாடம் வயித்துப் பாட்டை பாக்க நினைக்கும் நடுத்தர,கீழ்த்தட்டு மக்களின் வயிற்றில் அடிப்பது என்ன நியாயம்.
இதற்கு ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தமிழ்நாடு பிரிவின் உதவி துணைத் தலைவர் சொல்கிறார்.''தள்ளூ வண்டியில் வியாபாரம் செய்யும் வியாபாரிகள் மொத்த விலைக்கே எங்களிடமே வாங்கி விற்கலாம்.இதில் இடைத்தகர்களுக்கு வேலையில்லை.எடை மோசடி,சுகாதாரமற்ற சூழல் மாறும்.விவசாயிகளோடு ஒப்பந்தம் செய்து விவசாயத்திற்கு தேவையான முன்பணம் கொடுத்து,பின்னர் கொள்முதல் செய்கிறோம் என்வே மலிவு விலைக்குத் தர முடிகிறது''என்கிறார்.
இப்படித்தான் ரிலையன்ஸ் மொபையில் சந்தையில் இடம் பிடித்தது.
சுத்தம்,சரியான எடையளவு வரவேற்கத் தக்கது எனினும் கோடிக்கணக்கில் பணம் படைத்தவர்கள் சில்லறை வியாபாரிகளின் வயிற்றெரிச்சலுடன் இந்தத் துறையில் கால் பதிக்கத்தான் வேண்டுமா?
கோடிஸ்வரன் காய்கறி வியாபாரத்தை ஏ.சி அறை போட்டு ஷோவாகச் செய்ய முடியும்.ஆனால் ஒரு சிறு வியாபாரி தொலைத் தொடர்பு,பெட்ரோலியம் என்பதை கனவில்கூட நினைக்க முடியுமா?
சென்னையின் மொத்த மக்கள் தொகை சுமார் ஒரு கோடியில்,12 கடைகளுக்கும் வரும் வாடிக்கையாளர்கள் பன்னிரெண்டாயிரம்தான் இருக்கும் .இது எந்தவிதத்திலும் யாரையும் பாதிக்காது.மார்க்கெட் பெரிசு எத்தனை பேர் வேண்டுமானாலும் இந்த துறையில் வியாபாரம் செய்யலாம் என உறுதி கூறும் 'ரிலையன்ஸ் ஃபிரஷ்' நடுத்தட்டு,மேல்மட்ட வர்க்கத்திற்கு வேண்டுமானால் வரப் பிரசாதமாக இருக்கலாம் .கீழ்த்தட்டு மக்களுக்கு இது சாபக் கேடே.
Sunday, February 18, 2007
பெண்ணுரிமை..ஒரு பார்வை
சகோதரி லட்சுமியின் பெண்ணுரிமை பற்றி பேசுவது தேவையா
என்ற பதிவும்,பால பாரதியின் 'ஆதலினால்' பதிவும் என்னுடைய இந்தப் பதிவுக்கு காரணமானது.
முதலில் பா.பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.[நட்சத்திர வாரத்திற்கும்,பெண்ணியம் பற்றிய கருத்துக்கும்].
சாதி,மத பாகுபாடுபோல் ஆண் பெண் பாகுபாடும் ஒரு விவாதப் பொருளாகிப் போனது வேதனைகுறிய விஷயம்.
இந்த சமூகத்தில் ஒரு ஆண் செய்வதை பெண் செய்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விடுவர்.பா.பாரதியின் நண்பரைப்போல் 1,2,3 முறை என ஒரு பெண் காதல் வயப்பட்டால் அதைப் பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.கூசாமல் பட்டம் கட்டி விடுவர்.இதையே ஒரு ஆண் செய்யும் போது தப்பாகத் தெரியாது. அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.அந்த ஒரு சிலரை வைத்து பெண்களை எடைபோடுவது சமூக இயல்பாகி விட்டது.
அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.
பெண்ணுக்கு பெண் எதிரியாம்.ஆணுக்கு ஆண் எதிரியாவதில்லையா? எந்த ஒரு கோணத்திலிருந்து விவாதித்தாலும்,அது ஆண்பெண் இருவருக்குமானது தானே.
பெண்ணிடம் சில மேன்மைகளும்,ஆணிடம் சில ஆளுமைகளும் இருக்கலாம்.ஆனால் யாரும் யாரைவிடவும் உயர்த்தி,தாழ்த்தி இல்லை.
அவதூறுகளுக்கும்,ஆபாசங்களுக்கும் அஞ்சியே எப்போதும் பெண் அமைதி காத்து,கவசம் அணிகிறாள்.
பெண்ணுரிமை பேசும் எந்த ஆண்மகனும் தன் வீட்டுப் பெண் அடங்கி [அடக்கமாக] இருக்கவே விரும்புவான். அடுத்த வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும் யாரும் தன் வீட்டுப் பெண் விமர்சிக்கப் படுவதை விரும்ப மாட்டார்கள்.
காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.
ஒரு பெண் கணவனுக்கு மனைவியாகவோ,பிள்ளைக்குத் தாயாகவோ ஒரு குடும்பத்தின் அங்கமாகும் போது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும்.அதுதான் உண்மையான பெண்ணுரிமை.
என்ற பதிவும்,பால பாரதியின் 'ஆதலினால்' பதிவும் என்னுடைய இந்தப் பதிவுக்கு காரணமானது.
முதலில் பா.பாரதிக்கு என் வாழ்த்துக்கள்.[நட்சத்திர வாரத்திற்கும்,பெண்ணியம் பற்றிய கருத்துக்கும்].
சாதி,மத பாகுபாடுபோல் ஆண் பெண் பாகுபாடும் ஒரு விவாதப் பொருளாகிப் போனது வேதனைகுறிய விஷயம்.
இந்த சமூகத்தில் ஒரு ஆண் செய்வதை பெண் செய்தால் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சிக்கக் கிளம்பி விடுவர்.பா.பாரதியின் நண்பரைப்போல் 1,2,3 முறை என ஒரு பெண் காதல் வயப்பட்டால் அதைப் பார்க்கும் கோணமே வேறாக இருக்கும்.கூசாமல் பட்டம் கட்டி விடுவர்.இதையே ஒரு ஆண் செய்யும் போது தப்பாகத் தெரியாது. அதற்காக் காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலிக்க பெண்ணுக்கு உரிமை கோரவில்லை.ஒரு சிலரைத் தவிர,மொத்தத்தில் பெண்கள் காதலுக்கு நேர்மையானவர்களே.அந்த ஒரு சிலரை வைத்து பெண்களை எடைபோடுவது சமூக இயல்பாகி விட்டது.
அனைத்துத் துறையிலும் பெண்கள் சாதித்தே வருகின்றனர்.
பெண்ணுக்கு பெண் எதிரியாம்.ஆணுக்கு ஆண் எதிரியாவதில்லையா? எந்த ஒரு கோணத்திலிருந்து விவாதித்தாலும்,அது ஆண்பெண் இருவருக்குமானது தானே.
பெண்ணிடம் சில மேன்மைகளும்,ஆணிடம் சில ஆளுமைகளும் இருக்கலாம்.ஆனால் யாரும் யாரைவிடவும் உயர்த்தி,தாழ்த்தி இல்லை.
அவதூறுகளுக்கும்,ஆபாசங்களுக்கும் அஞ்சியே எப்போதும் பெண் அமைதி காத்து,கவசம் அணிகிறாள்.
பெண்ணுரிமை பேசும் எந்த ஆண்மகனும் தன் வீட்டுப் பெண் அடங்கி [அடக்கமாக] இருக்கவே விரும்புவான். அடுத்த வீட்டுப் பெண்ணை விமர்சிக்கும் யாரும் தன் வீட்டுப் பெண் விமர்சிக்கப் படுவதை விரும்ப மாட்டார்கள்.
காதலோ,கற்பு நெறியோ கல்வியோ,வேலை வாய்ப்போ
திருமணமோ,குடும்ப பாரம் சுமத்தலோ பிள்ளை வளர்ப்போ,வரவுசெலவோ இருவருக்கும் பொது என்ற மனப்பான்மை வரும்வரை பெண்ணுரிமை என்பது விவாதமாகவே தான் இருக்கும்.
புஷனைக் கூடையில் சுமந்து செல்ல பெண்கள் நளாயினிகள் இல்லை.தப்பென்றால் தட்டிக் கேட்போம்.
தவறென்றால் திருத்தியும் கொள்வோம்.
உரிமை என்பது கேட்டுப் பெறுவதோ,கொடுத்து வாங்குவதோ இல்லை.
ஒரு பெண் கணவனுக்கு மனைவியாகவோ,பிள்ளைக்குத் தாயாகவோ ஒரு குடும்பத்தின் அங்கமாகும் போது உரிமை தானாகவே கிடைக்க வேண்டும்.அதுதான் உண்மையான பெண்ணுரிமை.
Monday, January 29, 2007
சத்தியத்தின் வயது நூறு
மகாத்மாகாந்திஜி தொடங்கிய சத்யாகிரக போராட்டத்தின் வயது நூறு.இதை இரண்டு நாள் விழாவாக இன்றும் நாளையும் தில்லியில் கொண்டாடுகிறார்கள்.
இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ
''சம வாய்ப்புக்கான கனவு
சொத்துக்கள் சமமாக பங்கீடு
செய்வதற்கான கனவு
ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
ஒரு மனிதனின் நிறங்கொண்டு
அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
நாட்டின் வளங்கள் அனைத்தும்
ஒரு சிலரின் உரிமையாகாமல்
மனுக்குல மேம்பாட்டிற்கான
கருவியாகும் கனவு
ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
.... ..... ....... ....... ....... ....... ...... என்று
மக்களை பாகுபடுத்தாத கனவு.....
மார்ட்டின் லூதர்கிங்
இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ
''சம வாய்ப்புக்கான கனவு
சொத்துக்கள் சமமாக பங்கீடு
செய்வதற்கான கனவு
ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
ஒரு மனிதனின் நிறங்கொண்டு
அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
நாட்டின் வளங்கள் அனைத்தும்
ஒரு சிலரின் உரிமையாகாமல்
மனுக்குல மேம்பாட்டிற்கான
கருவியாகும் கனவு
ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
.... ..... ....... ....... ....... ....... ...... என்று
மக்களை பாகுபடுத்தாத கனவு.....
மார்ட்டின் லூதர்கிங்
Sunday, January 14, 2007
முகம் தெரியாத நண்பர்களுக்கு...இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
முகம் தெரியாத உறவுகளாய்
.நண்பர்களாய்இருக்கும்..
என்னை எனக்கே என்
எழுத்துக்களின் மூலம் தெரியச் செய்த
அன்பான தமிழ்மண அன்பர்களுக்கு...வாசகர்களுக்கு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
.நண்பர்களாய்இருக்கும்..
என்னை எனக்கே என்
எழுத்துக்களின் மூலம் தெரியச் செய்த
அன்பான தமிழ்மண அன்பர்களுக்கு...வாசகர்களுக்கு
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
Saturday, January 06, 2007
பால் அருந்தும் அன்னங்கள்
தமிழ்மணத்தில் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும் போது மனதில் தோன்றியது இந்தப் பதிவுக்கான கரு.
ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
"இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.
இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
[இதற்கு எத்தனை வசவு வருமோ]
அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]
ஒரு ஊரில் தலை சிறந்த ஒரு ஓவியர் இருந்தாராம்.
அவருடைய ஓவியங்கள் பலராலும் இரசிக்கப்பட்டு வந்தன.
இருந்தும் அந்த ஓவியருக்கு தன் ஓவியங்களை எந்த அளவிற்கு மக்கள் இரசிக்கிறார்கள் என அறியும் ஆசை வந்தது.
தன்னுடைய மிகச் சிறப்பான ஓவியம் ஒன்றை நகரின் முக்கிய வீதியில் வைத்து அதன் அருகில்
"இந்த ஓவியத்தில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் கருதும் பகுதியை பச்சை வண்ணத்தின் மூலம் குறிப்பிடவும்"
என்று ஒரு குறிப்பையும் எழுதி வைத்தார்.
மறுநாள் ஓவியர் கடை வீதிக்கு வந்து பார்த்தபோது,ஓவியம் முழுவதும் பச்சை வண்ணமயமாக காணப்பட்டது.
சந்தோஷமடைந்தாலும்,ஓவியருக்கு ஒரு சந்தேகம்.ஒருவேளை நன்றாக இல்லாத பகுதியை மட்டும் குறிப்பிட சொல்லியிருக்க வேண்டுமோயென்று.
மறுபடியும் அதே ஓவியத்தின் மற்றொரு பிரதியை அங்கு வைத்து,நன்றாக இல்லாத பகுதியை சிவப்பு வண்ணத்தில் குறிக்கும்படி ஒரு போர்டும் வைத்தார்.
மறுதினம் பார்க்கையில் முன்பு போலவே ஓவியம் முழுதும் சிவப்பு மையினால் மெழுகப் பட்டிருந்தது.
பிறகுதான் ஓவியர் உணர்ந்தார் மனிதர்களுடைய பார்வைகளும் கோணமும் இரசனையும் ஆளுக்கு ஆள் மாறுபடும் என்பதை.
இதைப் போலத்தான் இருக்கிறது தமிழ்மணப் பதிவுகளும் ,இரசனையும்.
இலக்கியம்,தமிழ் ,ஆன்மிகம்,ஈழம்,பெரியாரிஸம்,பார்ப்பனீயம்சினிமா,நகைச்சுவை கணிணி தொழில்நுட்பம்,சமையல்,அனுபங்கள் என பலதரப்பட்ட விஷயங்கள் பதியப்படுகின்றன.
பிடித்தவர்கள் பிடித்ததைப் படிக்கவோ பின்னூட்டம் இடவோ செய்யலாம்.
பிடிக்கவில்லையென்றால் விட்டுவிடலாம்.
ஆனால் சில பதிவுகளில் ஆபாசமான்,தரக்குறைவான மூன்றாந்தர பின்னூட்டங்கள் வருகிறது.
குறைந்தபட்சம் பதிவர்களாவது அதை நீக்கி விடலாம்.அவர்களும் செய்வதில்லை ஏனோ?
இதை எழுதவோ,விமர்சிக்கவோ கூட எனக்கு அதிகாரம் இல்லைதான் ஏனெனில் அது அது அவரவர் விருப்பம்.
இருந்தாலும் மனதில் பட்டதால் சொல்கிறேன்
பாலும் தண்ணீரும் கலந்திருந்தாலும் பாலை மட்டுமே பருகுமாம் அன்னப் பறவை. அதுபோல எவ்வளவோ பதிவுகள் தினமும் பதிவிடப் படுகிறது.நமக்கு பிடித்ததை உடன்பாடானதை படிக்கலாம்.
மாறுபட்ட கருத்து இருந்தால் விமர்சிக்கலாம்,ஆனால் வரைமுறை மீறவேண்டாம் என்பது என் சொந்தக் கருத்து
[இதற்கு எத்தனை வசவு வருமோ]
அன்னியனாய்...தண்டிக்காமல் அன்னப் பறவையாய் இருப்போம்[இது சமுதயத்திற்கு அல்ல.தமிழ்பதிவுகளுக்கு மட்டுமே]
Wednesday, December 27, 2006
கனவின் வண்ணங்கள் நூறு
சமீபகாலமாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் 'அஞ்சலி' என்ற தொடரின் 'டைட்டில்' பாடல்வரிகள் இவை.
கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பது:
"எப்போதும் கனவின் வண்ணம்
கருப்பு வெள்ளைதான்
கனவுக்கு நிறங்கள் இல்லைதான்
நான்காணும் கனவு மட்டும் ஏழு வண்ணம்தான்
சமயத்தில் நூறு வண்ணம்தான்''
நான் மிகவும் ரசித்துக்குக் கேட்கும் வரிகள்.எத்தனை அர்த்தப் பொதிவுகள்.வாழ்க்கையே நம் கனவுகளில் தானே மையம்கொண்டிருக்கிறது.நேற்றைய கனவு இன்று பொய்த்துப்போனாலும் நாம் நாளைய கனவில் மிதந்து கொண்டுதான் இருக்கிறோம்.
கனவுகள் நம் இலட்சியத்தின் கதவுகள் என்றால் ந்ம் முயற்சிகள் தான் அதன் திறவு கோல்.அதனால் தான் நம் குடியரசு தலைவர்கூட இளைஞர்களை கனவு காணச் சொன்னார்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் தேர்வு தோல்விகளுக்கும்,காதல் தோல்விகளுக்கும் தம் வாழ்வை பணயம் வைக்கிறார்கள்.
தங்க மெடல் வாங்கி படிப்பில் முதலிடம் வந்தவர்கள் அரசாங்க பதவியில் கீழ்நிலையிலும்,தோற்று பின் ஜெயித்தவன் அதைவிட உயர்ந்த பொறுப்பிலும் இருக்கும் பல சாட்சியங்கள் என்னிடம் உண்டு.ஏன் நீங்களே கூட அறிந்திருக்கலாம்.
குடும்ப பிரச்சினைகள்,காதல் தோல்விகளை எதிர் கொள்ள முடியாமல் மாண்டுபோவோர் எண்ணிக்கை அதிகரித்திக் கொண்டேதான் இருக்கிறது.
தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான்.சறுக்கியவன் மீண்டும் எழுவதும் நடப்பதும் தானே நியதி.தோல்வியைக் கண்டு துவளாமல் எங்கு தவறினோம் என்பதை நேர் செய்தால் அடுத்து வெற்றி மேல் வெற்றிதான்.
கனவுகள் காண்போம் அது ந்னவாகும் வரை.......
கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பது:
"எப்போதும் கனவின் வண்ணம்
கருப்பு வெள்ளைதான்
கனவுக்கு நிறங்கள் இல்லைதான்
நான்காணும் கனவு மட்டும் ஏழு வண்ணம்தான்
சமயத்தில் நூறு வண்ணம்தான்''
நான் மிகவும் ரசித்துக்குக் கேட்கும் வரிகள்.எத்தனை அர்த்தப் பொதிவுகள்.வாழ்க்கையே நம் கனவுகளில் தானே மையம்கொண்டிருக்கிறது.நேற்றைய கனவு இன்று பொய்த்துப்போனாலும் நாம் நாளைய கனவில் மிதந்து கொண்டுதான் இருக்கிறோம்.
கனவுகள் நம் இலட்சியத்தின் கதவுகள் என்றால் ந்ம் முயற்சிகள் தான் அதன் திறவு கோல்.அதனால் தான் நம் குடியரசு தலைவர்கூட இளைஞர்களை கனவு காணச் சொன்னார்.
ஆனால் இன்றைய இளைஞர்கள் தேர்வு தோல்விகளுக்கும்,காதல் தோல்விகளுக்கும் தம் வாழ்வை பணயம் வைக்கிறார்கள்.
தங்க மெடல் வாங்கி படிப்பில் முதலிடம் வந்தவர்கள் அரசாங்க பதவியில் கீழ்நிலையிலும்,தோற்று பின் ஜெயித்தவன் அதைவிட உயர்ந்த பொறுப்பிலும் இருக்கும் பல சாட்சியங்கள் என்னிடம் உண்டு.ஏன் நீங்களே கூட அறிந்திருக்கலாம்.
குடும்ப பிரச்சினைகள்,காதல் தோல்விகளை எதிர் கொள்ள முடியாமல் மாண்டுபோவோர் எண்ணிக்கை அதிகரித்திக் கொண்டேதான் இருக்கிறது.
தோல்வி என்பது ஒரு சறுக்கல்தான்.சறுக்கியவன் மீண்டும் எழுவதும் நடப்பதும் தானே நியதி.தோல்வியைக் கண்டு துவளாமல் எங்கு தவறினோம் என்பதை நேர் செய்தால் அடுத்து வெற்றி மேல் வெற்றிதான்.
கனவுகள் காண்போம் அது ந்னவாகும் வரை.......
Monday, December 25, 2006
புத்தாண்டே வருக! பொலிவுடனே வருக!!வருக2007
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி,எதிர்பார்ப்பு,நம்பிக்கை.
பழைய ஆண்டின் விரும்பத்தகாத நிகழ்வுகளோ,கசப்போ இந்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதே அனைவரின் தலையாய விருப்பமாக அமையும். பழைய ஆண்டைவிட இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
புத்தாண்டு பிறப்பின் வரலாறு பலவாறாகக் கூறப்படுகிறது.
பூத்துக் குலுங்கும் மலர்கள்,செழித்து விளைந்த பயிர்கள்,பழுத்துத் தொங்கும் கனிகள் யாவும் வசந்தத்தின் வரவுக்கு கட்டியம் கூறும் காலமே ஒரு புதிய ஆண்டின் துவக்கமாக கருதப்பட்டு வந்தது.பின்னாளில் வருடத்தின் துவக்கமாக ஜனவரி1 புத்தாண்டு தினமானது.பழமையை விடாது ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை கேலி செய்து வந்ததுதானாம் 'முட்டாள்கள் தினம்' .
பண்டைய நாட்களிலேயே புத்தாண்டு பல நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது.
வட்டவடிவ பொருட்களை உண்பது ,பயன்படுத்துவது ஆண்டின் முழுமையைக் குறிப்பதாகவும்,முட்டை கோஸின் இலைகள் பணத்தாள்களை போல செல்வ செழிப்பைக் குறிப்பதாகவும் நினைத்தனர்.நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களை உண்பதும்,அரிசி சோறும் கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப் பட்டது.
இன்றைய காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம்?
புது வருடத்துவக்கத்தில் கிடைக்கும் அத்துனை அதிர்ஷ்டமும் ஆண்டு முழுதும் நிலைக்க வேண்டும் என்று விரும்புவோம்.ஆடை அணிகலன்கள்,தள்ளுபடி எனக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் தெரிந்தே ஏமாறும் நாம் வாங்கும் பொருட்கள் என ஒவ்வொரு புது வருடமும் நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வாழ்த்துக்களுக்கும் ,வாழ்த்து அட்டைகளுக்கும் முன்னுரிமை இருந்த போதிலும்,கை பேசி குறுஞ்செய்திகளும்,,ஈ கார்டு வாழ்த்துக்களும்,மின்னஞ்சல்களும் அவற்றை புறம் தள்ளி முன்னிற்கும்.
இவையனைத்துக்கும் மேலாக தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படவெளியீடும் அதை அன்றே பார்ப்பதுதான் தன் பிறவிப்பயன் என்போரும் உண்டு
நள்ளிரவு பார்ட்டிகள்,டிஸ்கொதெ போன்ற மேல்நாட்டு கலாச்சாரமும் நாம் விட்டு வைப்பதில்லை.
இத்துடன் அவரவர் வசதிக்கு ஏற்ப குடும்பத்தினருக்கோ,காதலருக்கோ,நண்பர்களுக்கோ உயர் அதிகாரிகளுக்கோ நம்மால் முடிந்தபரிசளிப்புகளும் உண்டு.
இந்த கோலாகலங்கள் முடிந்த பிறகு பெரும்பாலனோர் மனதில் எடுக்கும் தீர்மானம் இந்த வருடத்திலிருந்து ஒழுங்காக 'டையரி' எழுத வேண்டும் என்பது.
தீவிரமாக எழுத ஆரம்பிப்போம் ஆனால் எத்தனை நாள்வரைஎன்று நமக்கே தெரியாது.வருடம்365 நாட்களும் தவறாது யாரேனும் எழுதி இருந்தால் சொல்லுங்கள் தலை வணங்குகிறேன்
இது போகட்டும் இந்த 'புது வருட தீர்மானங்கள்' எப்படி?
இந்த வருடம் முதல்,அதைச்செய்யமாட்டேன்[குடி,புகை]
இதை தவறாமல் செய்வேன்[டையரி] போன்ற
சில 'தீய விட்டொழித்தல்களும்' பல நல்ல 'ஆரம்பித்தல்களும்' அரசியல்வாதிகளின் வாக்குறுதியாய்த்தானே போகின்றன.
ஒவ்வொரு வருடமும் நாம் வாங்கும் டைரியில் சில பக்கங்களே எழுதப்பட்டு பின் பிள்ளைகள் கிறுக்கவோ,வீட்டம்மா பால்,சலவை கணக்கு எழுதவோ பயன்பட்டு வருட முடிவில் பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைகிறது. நானும்
ஒருமுறை வருட கடைசியில் இப்படி எழுதினேன்:
"வீணாய்ப் போனது டைரியின் தாள்கள் மட்டுமில்லை
என் வாழ்க்கையின் நாட்களும் தான்"
எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்ற பிரம்மாஸ்திரம் உள்ளவரை நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
போனது போகட்டும்...இதுவரை
வாருங்கள் இனி என்னசெய்யலாம் இந்த புத்தாண்டிலிருந்து என்று யோசிப்போம்.
சின்ன சின்னதாக நம்மால் முடிந்தவரை...
நம் குடும்பத்தாருக்கு...
நம் நண்பர்களுக்கு......
நம் அண்டை அயலாருக்கு...
நாம் வாழும் ஊருக்கு.....
நம் நாட்டுக்கு......
இயற்கையை காக்க சுற்று சூழலுக்கு.......
எடுப்போமே புது தீர்மானங்களை இந்த புது ஆண்டிலிருந்து.......
புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி,எதிர்பார்ப்பு,நம்பிக்கை.
பழைய ஆண்டின் விரும்பத்தகாத நிகழ்வுகளோ,கசப்போ இந்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதே அனைவரின் தலையாய விருப்பமாக அமையும். பழைய ஆண்டைவிட இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
புத்தாண்டு பிறப்பின் வரலாறு பலவாறாகக் கூறப்படுகிறது.
பூத்துக் குலுங்கும் மலர்கள்,செழித்து விளைந்த பயிர்கள்,பழுத்துத் தொங்கும் கனிகள் யாவும் வசந்தத்தின் வரவுக்கு கட்டியம் கூறும் காலமே ஒரு புதிய ஆண்டின் துவக்கமாக கருதப்பட்டு வந்தது.பின்னாளில் வருடத்தின் துவக்கமாக ஜனவரி1 புத்தாண்டு தினமானது.பழமையை விடாது ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை கேலி செய்து வந்ததுதானாம் 'முட்டாள்கள் தினம்' .
பண்டைய நாட்களிலேயே புத்தாண்டு பல நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது.
வட்டவடிவ பொருட்களை உண்பது ,பயன்படுத்துவது ஆண்டின் முழுமையைக் குறிப்பதாகவும்,முட்டை கோஸின் இலைகள் பணத்தாள்களை போல செல்வ செழிப்பைக் குறிப்பதாகவும் நினைத்தனர்.நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களை உண்பதும்,அரிசி சோறும் கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப் பட்டது.
இன்றைய காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம்?
புது வருடத்துவக்கத்தில் கிடைக்கும் அத்துனை அதிர்ஷ்டமும் ஆண்டு முழுதும் நிலைக்க வேண்டும் என்று விரும்புவோம்.ஆடை அணிகலன்கள்,தள்ளுபடி எனக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் தெரிந்தே ஏமாறும் நாம் வாங்கும் பொருட்கள் என ஒவ்வொரு புது வருடமும் நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வாழ்த்துக்களுக்கும் ,வாழ்த்து அட்டைகளுக்கும் முன்னுரிமை இருந்த போதிலும்,கை பேசி குறுஞ்செய்திகளும்,,ஈ கார்டு வாழ்த்துக்களும்,மின்னஞ்சல்களும் அவற்றை புறம் தள்ளி முன்னிற்கும்.
இவையனைத்துக்கும் மேலாக தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படவெளியீடும் அதை அன்றே பார்ப்பதுதான் தன் பிறவிப்பயன் என்போரும் உண்டு
நள்ளிரவு பார்ட்டிகள்,டிஸ்கொதெ போன்ற மேல்நாட்டு கலாச்சாரமும் நாம் விட்டு வைப்பதில்லை.
இத்துடன் அவரவர் வசதிக்கு ஏற்ப குடும்பத்தினருக்கோ,காதலருக்கோ,நண்பர்களுக்கோ உயர் அதிகாரிகளுக்கோ நம்மால் முடிந்தபரிசளிப்புகளும் உண்டு.
இந்த கோலாகலங்கள் முடிந்த பிறகு பெரும்பாலனோர் மனதில் எடுக்கும் தீர்மானம் இந்த வருடத்திலிருந்து ஒழுங்காக 'டையரி' எழுத வேண்டும் என்பது.
தீவிரமாக எழுத ஆரம்பிப்போம் ஆனால் எத்தனை நாள்வரைஎன்று நமக்கே தெரியாது.வருடம்365 நாட்களும் தவறாது யாரேனும் எழுதி இருந்தால் சொல்லுங்கள் தலை வணங்குகிறேன்
இது போகட்டும் இந்த 'புது வருட தீர்மானங்கள்' எப்படி?
இந்த வருடம் முதல்,அதைச்செய்யமாட்டேன்[குடி,புகை]
இதை தவறாமல் செய்வேன்[டையரி] போன்ற
சில 'தீய விட்டொழித்தல்களும்' பல நல்ல 'ஆரம்பித்தல்களும்' அரசியல்வாதிகளின் வாக்குறுதியாய்த்தானே போகின்றன.
ஒவ்வொரு வருடமும் நாம் வாங்கும் டைரியில் சில பக்கங்களே எழுதப்பட்டு பின் பிள்ளைகள் கிறுக்கவோ,வீட்டம்மா பால்,சலவை கணக்கு எழுதவோ பயன்பட்டு வருட முடிவில் பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைகிறது. நானும்
ஒருமுறை வருட கடைசியில் இப்படி எழுதினேன்:
"வீணாய்ப் போனது டைரியின் தாள்கள் மட்டுமில்லை
என் வாழ்க்கையின் நாட்களும் தான்"
எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்ற பிரம்மாஸ்திரம் உள்ளவரை நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
போனது போகட்டும்...இதுவரை
வாருங்கள் இனி என்னசெய்யலாம் இந்த புத்தாண்டிலிருந்து என்று யோசிப்போம்.
சின்ன சின்னதாக நம்மால் முடிந்தவரை...
நம் குடும்பத்தாருக்கு...
நம் நண்பர்களுக்கு......
நம் அண்டை அயலாருக்கு...
நாம் வாழும் ஊருக்கு.....
நம் நாட்டுக்கு......
இயற்கையை காக்க சுற்று சூழலுக்கு.......
எடுப்போமே புது தீர்மானங்களை இந்த புது ஆண்டிலிருந்து.......
Friday, December 22, 2006
ஒரு புதிய இணைப்பு பதிவு
ஒரூ புதிய இணைப்பு பதிவாக இந்த 'பிரார்த்தனை நேரம்'
தொழில் நுட்பம் தெரியாததால் என் பதிவிலேயே இணைத்து உங்களை அழைக்கிறேன்
அன்புடன் கௌசி
தொழில் நுட்பம் தெரியாததால் என் பதிவிலேயே இணைத்து உங்களை அழைக்கிறேன்
அன்புடன் கௌசி
Tuesday, December 19, 2006
பதக்கப் பறிப்பின் பின்னணி....
இரண்டு நாட்களாக மனதை குடைந்த கேள்விக்கு இன்று விடை தேடிக் கண்டுபிடித்தேன்.
பாலினப் பிரச்சினையில் சாந்தியின் பதக்கம் பறிப்பு என்றதும் தாங்க முடியாத கோபம்தான் வந்தது.
ஒருவர் ஆணோ,பெண்ணோ அது தீர்மானிக்கப் படுவது பிறப்பின் மூலம் தானே இதில் சாந்தியின் தவறென்ன என்று ஆராய முனைந்தேன்.
ஒலிம்பிக் விளையாட்டுக்ளில் பெண்கள் பங்கேற்க தொடங்கிய காலத்திலிருந்தே இந்த 'பாலின தெரிவு சோதனை"யும் தொடங்கி விட்டது
பெண்கள் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டுகளில்,கள்ளத் தனமாக பெண் போல் நுழைந்து வாகை சூடும் தந்திரத்தை ஆண்கள் கையாண்டதே இந்த 'சோதனை' உருவாக கருவாக அமைந்தது.
1912 மற்றும்1936 களில் பேசப் பட்டாலும் முதன் முதலில் 1966 ல் தான் தீவிரமடைந்தது.
அந்த கால கட்டத்தில் மிகவும் மோசமான நடைமுறைகள் கையாளப் பட்டது.
பெண் மருத்துவ வல்லுனர்கள் முன்பாக நிர்வாண அணிவகுப்பு முறை அத்துடன் நேரிடையாக பிறப்புறுப்பை பரிசோதித்தல்
பின்னாளில் இம்முறைகள் கைவிடப் பட்டு,1968 ல் நடைபெற்ற மெக்சிகோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிவியல் பூர்வமான சோதனை நடத்தப் பட்டது.
வாயின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை [sample tissues taken from the inner layers of the cheeks]பரிசோதனை முறை
[Buccal smear test] அமுல் படுத்தப் பட்டது.பாலூட்டிகள்[MAMMALS] அனைத்தும்
[மனிதன் ஒரு பாலூட்டி வகை நன்பதை கருத்தில் கொள்க]
குரோமசோம் அடிப்படையிலேயே ஆண்,பெண் என்று வகைப்படுத்தப் படுகின்றன.
XX வகை குரோமசோம் பெண்ணுக்கென்றும்
XYவகை குரோமசோம் ஆணுக்கென்றும் உள்ளது.
இதில்'பெண்மை' பரிசோதனைக்கு உட்படும் வீராங்கனைகள் Y வகை கொண்டிருந்தால் ஆண் தன்மையுடையவர்களாக கருதப் படுகிறனர்.70,80களில் இது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது.ஏனெனில் இது ஒரு 'ந்ம்பிக்கைக்குகந்த' சோதனையாக கருத முடியாத நிலை.பிறப்பிலேயே இந்த 'குரோமசோம்கள் [மரபணுக்கள்] குறைபாடு உள்ளவர்கள் இந்த சோதனை முடிவில் ஆணாக[பாலின தோல்வி] கருதப்படும் வாய்ப்பு அதிகம் கொடுமை என்னவென்றால்,ஒரு பெண் பாலின் சோதனையில் தோற்றால்[ Y வகை கொண்டிருந்தால்]மொத்தமாக போட்டியிலும் தோல்வி
ஆனால் ஒரு ஆண் பாலின சோதனையில் தோற்றாலும் போட்டியில் தோல்வி இல்லை.
1991 வரை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மகளிர் தங்கள் புகைப்படத்துடன் IOC யால் பரிந்துரை செய்யப்பட்ட பாலின தெரிவு சோதனைக்கான அட்டை சமர்ப்பித்தல் வேண்டியிருந்தது.
இந்த BUCCAL SMEAR நம்பகமானது இல்லை என்று கருதப் பட்டதால்,1992 பார்சிலோனாவில் ந்டைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்,நுட்பமான ஒரு அறிவியல் முறை செயல்படுத்தப் பட்டது.
POLYMERASE CHAIN REACTION [PCR] எனப்படும் Y குரோமோசோம்களில் உள்ள DNA பற்றி ஆராயும் ஒரு மரபணு சோதனை நடத்தப் பட்டது.தலைமுடியின் உரோமக்கால்களில் சுரக்கும் ஒருவித சுரப்பு மூல்ம் Y குரோமசோம் உள்ளதா
என சோதிக்கப்பட்டது.
ஆயினும் மீண்டும் 1996 ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறுபடியும் 'பக்கல் ஸ்மியர்' நடத்தப் பட்டது.
ஆண்களின் கள்ளத்தனத்தால்,இந்நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க,தொடர்ந்த கடுமையான பயிற்சிகள் மூலமாகவோ அல்லது பிறவிக்கோளாறு காரணமாகவோ மரபணு குறைபாடு கொண்டவ்ர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதும்,பதக்கங்கள் ப்றிக்கப் படுவதும் எந்தவிதத்தில் நியாயம்.?உருவளவில் பெண்ணாகவும் மரபணு குறைபாட்டால் ஆணாகவும் கருதப்படும் அவலம் என்று மாறும் ?இதற்கு தீர்வுதான் என்ன?
உடம்பில் ஏற்படும் 'ஹார்மோன்' கோளாறுகளால் முகத்தில் முடிமுளைத்து காண்ப்படும் பெண்கள்,அதே ஹார்மோன் பிரச்சனையால் மார்பு பெருத்தும் பெண் குரல் உள்ள ஆண்கள் இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
சரி சர்வதேச அளவில் ந்டை பெறும் ஒலிம்பிக் போட்டிக்குத்தான் இந்த நெறி முறைகள் என்றால்,இரயில்வே துறையில் பணிக்கு விண்ணப்பித்த் 'இதே சாந்திக்கு' ஏன் வாய்ப்பு ம்றுக்கப் பட்டது?
ஆணாகவும் கருதாமல், பெண்ணாகவும் கருதாமல் இவர்களை என்னவென்பது?மானிடர்கள?இல்லை மாக்களா?
இப்போது புரிகிறது..மானிடராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் என்பது...
இப்போது அதையும் திருத்தி...மகளிராய் பிறப்பதற்கும் நல்ல மா தவம் செய்தே ஆக வேண்டும்
பாலினப் பிரச்சினையில் சாந்தியின் பதக்கம் பறிப்பு என்றதும் தாங்க முடியாத கோபம்தான் வந்தது.
ஒருவர் ஆணோ,பெண்ணோ அது தீர்மானிக்கப் படுவது பிறப்பின் மூலம் தானே இதில் சாந்தியின் தவறென்ன என்று ஆராய முனைந்தேன்.
ஒலிம்பிக் விளையாட்டுக்ளில் பெண்கள் பங்கேற்க தொடங்கிய காலத்திலிருந்தே இந்த 'பாலின தெரிவு சோதனை"யும் தொடங்கி விட்டது
பெண்கள் மட்டுமே பங்கு பெறும் விளையாட்டுகளில்,கள்ளத் தனமாக பெண் போல் நுழைந்து வாகை சூடும் தந்திரத்தை ஆண்கள் கையாண்டதே இந்த 'சோதனை' உருவாக கருவாக அமைந்தது.
1912 மற்றும்1936 களில் பேசப் பட்டாலும் முதன் முதலில் 1966 ல் தான் தீவிரமடைந்தது.
அந்த கால கட்டத்தில் மிகவும் மோசமான நடைமுறைகள் கையாளப் பட்டது.
பெண் மருத்துவ வல்லுனர்கள் முன்பாக நிர்வாண அணிவகுப்பு முறை அத்துடன் நேரிடையாக பிறப்புறுப்பை பரிசோதித்தல்
பின்னாளில் இம்முறைகள் கைவிடப் பட்டு,1968 ல் நடைபெற்ற மெக்சிகோ ஒலிம்பிக்கில் முதல் முறையாக அறிவியல் பூர்வமான சோதனை நடத்தப் பட்டது.
வாயின் உட்புறத்தில் இருந்து எடுக்கப்படும் திசுக்களை [sample tissues taken from the inner layers of the cheeks]பரிசோதனை முறை
[Buccal smear test] அமுல் படுத்தப் பட்டது.பாலூட்டிகள்[MAMMALS] அனைத்தும்
[மனிதன் ஒரு பாலூட்டி வகை நன்பதை கருத்தில் கொள்க]
குரோமசோம் அடிப்படையிலேயே ஆண்,பெண் என்று வகைப்படுத்தப் படுகின்றன.
XX வகை குரோமசோம் பெண்ணுக்கென்றும்
XYவகை குரோமசோம் ஆணுக்கென்றும் உள்ளது.
இதில்'பெண்மை' பரிசோதனைக்கு உட்படும் வீராங்கனைகள் Y வகை கொண்டிருந்தால் ஆண் தன்மையுடையவர்களாக கருதப் படுகிறனர்.70,80களில் இது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வந்தது.ஏனெனில் இது ஒரு 'ந்ம்பிக்கைக்குகந்த' சோதனையாக கருத முடியாத நிலை.பிறப்பிலேயே இந்த 'குரோமசோம்கள் [மரபணுக்கள்] குறைபாடு உள்ளவர்கள் இந்த சோதனை முடிவில் ஆணாக[பாலின தோல்வி] கருதப்படும் வாய்ப்பு அதிகம் கொடுமை என்னவென்றால்,ஒரு பெண் பாலின் சோதனையில் தோற்றால்[ Y வகை கொண்டிருந்தால்]மொத்தமாக போட்டியிலும் தோல்வி
ஆனால் ஒரு ஆண் பாலின சோதனையில் தோற்றாலும் போட்டியில் தோல்வி இல்லை.
1991 வரை ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மகளிர் தங்கள் புகைப்படத்துடன் IOC யால் பரிந்துரை செய்யப்பட்ட பாலின தெரிவு சோதனைக்கான அட்டை சமர்ப்பித்தல் வேண்டியிருந்தது.
இந்த BUCCAL SMEAR நம்பகமானது இல்லை என்று கருதப் பட்டதால்,1992 பார்சிலோனாவில் ந்டைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில்,நுட்பமான ஒரு அறிவியல் முறை செயல்படுத்தப் பட்டது.
POLYMERASE CHAIN REACTION [PCR] எனப்படும் Y குரோமோசோம்களில் உள்ள DNA பற்றி ஆராயும் ஒரு மரபணு சோதனை நடத்தப் பட்டது.தலைமுடியின் உரோமக்கால்களில் சுரக்கும் ஒருவித சுரப்பு மூல்ம் Y குரோமசோம் உள்ளதா
என சோதிக்கப்பட்டது.
ஆயினும் மீண்டும் 1996 ல் நடைபெற்ற அட்லாண்டா ஒலிம்பிக்கில் மறுபடியும் 'பக்கல் ஸ்மியர்' நடத்தப் பட்டது.
ஆண்களின் கள்ளத்தனத்தால்,இந்நிலைக்கு பெண்கள் தள்ளப்பட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க,தொடர்ந்த கடுமையான பயிற்சிகள் மூலமாகவோ அல்லது பிறவிக்கோளாறு காரணமாகவோ மரபணு குறைபாடு கொண்டவ்ர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதும்,பதக்கங்கள் ப்றிக்கப் படுவதும் எந்தவிதத்தில் நியாயம்.?உருவளவில் பெண்ணாகவும் மரபணு குறைபாட்டால் ஆணாகவும் கருதப்படும் அவலம் என்று மாறும் ?இதற்கு தீர்வுதான் என்ன?
உடம்பில் ஏற்படும் 'ஹார்மோன்' கோளாறுகளால் முகத்தில் முடிமுளைத்து காண்ப்படும் பெண்கள்,அதே ஹார்மோன் பிரச்சனையால் மார்பு பெருத்தும் பெண் குரல் உள்ள ஆண்கள் இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது?
சரி சர்வதேச அளவில் ந்டை பெறும் ஒலிம்பிக் போட்டிக்குத்தான் இந்த நெறி முறைகள் என்றால்,இரயில்வே துறையில் பணிக்கு விண்ணப்பித்த் 'இதே சாந்திக்கு' ஏன் வாய்ப்பு ம்றுக்கப் பட்டது?
ஆணாகவும் கருதாமல், பெண்ணாகவும் கருதாமல் இவர்களை என்னவென்பது?மானிடர்கள?இல்லை மாக்களா?
இப்போது புரிகிறது..மானிடராய் பிறப்பதற்கே நல்ல மா தவம் செய்திட வேண்டும் என்று ஏன் சொன்னார்கள் என்பது...
இப்போது அதையும் திருத்தி...மகளிராய் பிறப்பதற்கும் நல்ல மா தவம் செய்தே ஆக வேண்டும்
Saturday, December 16, 2006
ரசிகர் மன்றங்கள் தேவையா???
வெகு நாட்களாகவே எனக்குள் உள்ள ஒரு கேள்வி ரசிகர் மன்றங்கள் தேவையா என்பது.
ஒரு பாரதிக்கோ,பாரதி தாசனுக்கோ,வள்ளுவருக்கோ ரசிகர் மன்றங்கள் இருந்திருந்தால்,இந்த கேள்வி எழும்பி இருக்காது.
இன்று நாட்டில் ரசிகர் மன்றம் யாருக்கு நடிகர்களுக்குத்தானே?
ஒரு நடிகர் என்பவர் யார்?ஒரு தொழிலாளி!
ஒரு இராணுவ வீரர்,ஒரு வக்கீல்,ஒரு டாக்டர்,ஒரு ஆசிரியர்,ஒரு அலுவலக ஊழியர் போல் அவரும் ஒரு தொழில் செய்பவர்.
தன் நடிப்பால்,தனித்தன்மையால் மக்களை வசீகரிப்பவர்.
அவர்கள் நடிப்பை இரசிக்கலாம்,ஆராதிக்கலாம் தப்பில்லை.
ஆனால்,அவர்கள் துதி பாட மன்றங்கள் ஏன்?
எல்லையில் போர் புரிந்து சாகசம் புரிந்த அல்லது புரிந்து கொண்டு இருக்கும் ஒரு இரணுவ வீரருக்கு ரசிகர் மன்றம் உண்டா?
மருத்துவத் துறையில் சாதித்து பல உயிர்களைக் காத்து தெய்வம் போல் இருக்கும் மருத்துவருக்கு உண்டா?
வருங்கால சமுதாயம் எனப்படும் மாணவகளை உருவாக்கும் சிறந்த ஆசிரியர் பலர் உண்டு.அவர்களில் யாருக்கேனும் மன்றம் உண்டா?
தமிழ்,இலக்கியம்,அறிவியல்,பொருளாதாரம் என பல்துறை சாதனையாளருக்கு ரசிகர் உண்டா?மன்றம் உண்டா?
70 ,80 களில் நடிப்பால் சாதித்து இமயமாய் இருந்தவர் பலர்.
மேற் சொன்ன துறைகளில் உழைத்து ஒருவர் தன் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாததை,
கோடி,கோடியாய் ஒரே படத்துக்கு ஊதியமாய் பெறும் நடிகர்கள்
என்ன சாதிக்கிறார்கள்?
நல்ல் நடிகரைப் பிடிக்கும்,நல்ல நடிப்பை உற்சாகப் படுத்துவோம்
தவறில்லை ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டாமே
"உலகின் எட்டாவது அதிசயமே"
21 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகமே"
ஆணை இடு தலைவா செய்து முடிக்கிறோம்"
உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு"
இது போன்ற புதுமை தலைப்புகளை போட்டியிட்டு,போஸ்டர் அடித்து தன் அபிமான நடிகரின் பிற்ந்த நாள் கொண்டாடும் ரசிகன் தன் குடும்பத்தாரின் பிறந்த நாள் அறிந்திருப்பானா சந்தேகமே
பொண்டாட்டி,பிள்ளையின் நகையை அடமானம் வைத்து,சர்க்கரைப் பொங்கல் வைப்பான் ,அந்த நடிகரோ வெளி நாட்டில் தன் குடும்பத்தோடு பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்.
நான் நடிகர்களை குற்றம் சொல்லவே மாட்டேன்.கண்மூடித்தனமாய் தனிமனித ஆராதனை செய்யும் நம் மடத்தனத்தை சாடுவேன்.
நடிகையா கோயில் கட்டச் சொன்னார்?நாமல்லவோ செய்தோம்.
செய்யும் தொழிலை மதிப்போம்,அவர்தம் நற்பண்புகளை போற்றுவோம் ,தனி மனித ஆராதனையை நிறுத்துவோம்.இன்றைய கால் கட்டத்தில்
ரசிகர் மன்றங்கள் எல்லாம் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகின்றன.
ஓட்டுப் போடுவது தனிமனித உரிமை.இன்னாரை ஆதரிக்கிறேன் என்று சொல்வது மறைமுகமாகமாக இன்னாருக்கு போடச் செய்யும் தூண்டுதல் அல்லவா?
ரத்த தானம்,கண் தானம் செய்யும் மன்றங்களும் உண்டு என்பதை மறுப்பது முறையாகாது.
இருப்பினும் பொதுச் சேவையை தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யலாம் அதற்கு மன்றங்கள் தேவை இல்லை.
அனைவரும் சமமே.
உழைப்பும்,ஊதியமும் மாறலாம்.ஆனால் சுய தன்மையை விட்டுக் கொடுத்து தனி மனித துதி தேவையா?சிந்திப்போம்.
ஒரு பாரதிக்கோ,பாரதி தாசனுக்கோ,வள்ளுவருக்கோ ரசிகர் மன்றங்கள் இருந்திருந்தால்,இந்த கேள்வி எழும்பி இருக்காது.
இன்று நாட்டில் ரசிகர் மன்றம் யாருக்கு நடிகர்களுக்குத்தானே?
ஒரு நடிகர் என்பவர் யார்?ஒரு தொழிலாளி!
ஒரு இராணுவ வீரர்,ஒரு வக்கீல்,ஒரு டாக்டர்,ஒரு ஆசிரியர்,ஒரு அலுவலக ஊழியர் போல் அவரும் ஒரு தொழில் செய்பவர்.
தன் நடிப்பால்,தனித்தன்மையால் மக்களை வசீகரிப்பவர்.
அவர்கள் நடிப்பை இரசிக்கலாம்,ஆராதிக்கலாம் தப்பில்லை.
ஆனால்,அவர்கள் துதி பாட மன்றங்கள் ஏன்?
எல்லையில் போர் புரிந்து சாகசம் புரிந்த அல்லது புரிந்து கொண்டு இருக்கும் ஒரு இரணுவ வீரருக்கு ரசிகர் மன்றம் உண்டா?
மருத்துவத் துறையில் சாதித்து பல உயிர்களைக் காத்து தெய்வம் போல் இருக்கும் மருத்துவருக்கு உண்டா?
வருங்கால சமுதாயம் எனப்படும் மாணவகளை உருவாக்கும் சிறந்த ஆசிரியர் பலர் உண்டு.அவர்களில் யாருக்கேனும் மன்றம் உண்டா?
தமிழ்,இலக்கியம்,அறிவியல்,பொருளாதாரம் என பல்துறை சாதனையாளருக்கு ரசிகர் உண்டா?மன்றம் உண்டா?
70 ,80 களில் நடிப்பால் சாதித்து இமயமாய் இருந்தவர் பலர்.
மேற் சொன்ன துறைகளில் உழைத்து ஒருவர் தன் வாழ்நாளில் சம்பாதிக்க முடியாததை,
கோடி,கோடியாய் ஒரே படத்துக்கு ஊதியமாய் பெறும் நடிகர்கள்
என்ன சாதிக்கிறார்கள்?
நல்ல் நடிகரைப் பிடிக்கும்,நல்ல நடிப்பை உற்சாகப் படுத்துவோம்
தவறில்லை ஆனால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டாமே
"உலகின் எட்டாவது அதிசயமே"
21 ஆம் நூற்றாண்டின் ஆன்மீகமே"
ஆணை இடு தலைவா செய்து முடிக்கிறோம்"
உடல் மண்ணுக்கு உயிர் தலைவனுக்கு"
இது போன்ற புதுமை தலைப்புகளை போட்டியிட்டு,போஸ்டர் அடித்து தன் அபிமான நடிகரின் பிற்ந்த நாள் கொண்டாடும் ரசிகன் தன் குடும்பத்தாரின் பிறந்த நாள் அறிந்திருப்பானா சந்தேகமே
பொண்டாட்டி,பிள்ளையின் நகையை அடமானம் வைத்து,சர்க்கரைப் பொங்கல் வைப்பான் ,அந்த நடிகரோ வெளி நாட்டில் தன் குடும்பத்தோடு பிறந்த நாள் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்.
நான் நடிகர்களை குற்றம் சொல்லவே மாட்டேன்.கண்மூடித்தனமாய் தனிமனித ஆராதனை செய்யும் நம் மடத்தனத்தை சாடுவேன்.
நடிகையா கோயில் கட்டச் சொன்னார்?நாமல்லவோ செய்தோம்.
செய்யும் தொழிலை மதிப்போம்,அவர்தம் நற்பண்புகளை போற்றுவோம் ,தனி மனித ஆராதனையை நிறுத்துவோம்.இன்றைய கால் கட்டத்தில்
ரசிகர் மன்றங்கள் எல்லாம் அரசியல் நோக்கோடுதான் செயல்படுகின்றன.
ஓட்டுப் போடுவது தனிமனித உரிமை.இன்னாரை ஆதரிக்கிறேன் என்று சொல்வது மறைமுகமாகமாக இன்னாருக்கு போடச் செய்யும் தூண்டுதல் அல்லவா?
ரத்த தானம்,கண் தானம் செய்யும் மன்றங்களும் உண்டு என்பதை மறுப்பது முறையாகாது.
இருப்பினும் பொதுச் சேவையை தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்யலாம் அதற்கு மன்றங்கள் தேவை இல்லை.
அனைவரும் சமமே.
உழைப்பும்,ஊதியமும் மாறலாம்.ஆனால் சுய தன்மையை விட்டுக் கொடுத்து தனி மனித துதி தேவையா?சிந்திப்போம்.
Thursday, December 14, 2006
இதுவும் ஒரு கட்டிப்புடி வைத்தியம்
வாழ்க்கையில் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிய சந்தோஷம் தரும்
வசூல் ராஜா M.B.B.S B படத்தில் கமல் கட்டிப்புடி வைத்தியம் செய்வார்.ஹாஸ்பிட்டல் சுத்தம் செய்யும் தொழிலாளி மனம் உருகி சந்தோஷப்படுவார்.
அது போல இன்னுமொரு சின்ன விஷயம்[வைத்தியம்] நினைவு கூர்தலும் வாழ்த்துதலும்
நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள்,உறவினர்கள் பிறந்த நாள்,திருமணநாள்,மேலும் பல முக்கியமான நாட்கள் நினைவு கூர்ந்து வாழ்த்துங்கள் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள்
ஒவ்வொரு வருடமும் நான் பணிக்கு சேர்ந்த நாளை என் சக ஆசிரியர் நினைவு கூர்ந்து வாழ்த்தும் போதும் என் மாணவ்ர்கள் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லும் போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
என் வீட்டில் வேலை செய்த பிள்ளைக்கு ஒருநாள் இனிப்பு தந்து வாழ்த்தினேன் ."அக்கா இன்று என்ன ? என் பிறந்தநாள் கூட
எனக்கே தெரியாதே" என்றாள்.
இருக்கட்டுமே இன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்த நாள் என்றதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு விலையே இல்லை
நான் இன்னும் கொஞ்சம் ஓவரான 'லொல்லு பார்ட்டி'.
எங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டி ஸாரி...ஜீனோ அவன் பெயர்[சுஜாதாவின் என் இனிய இயந்திரா ஜீனோ வால் ஈர்க்கப்பட்டு வைத்த பேர்].அவன் பிறந்த நாள் கூட ஞாபகப்படுத்தி மகழ்வேன்
என்னுடன் பணிபுரியும் நண்பர்கள்,உறவினர்,அண்டை அயலார்
இவர்களை வாழ்த்தும் போது உருகித்தான் போவார்கள்.
இந்த உளவியல் ரீதியான அணுகுமுறையை நான் எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை.என் மாமியாரிடமிருந்துதான்
கற்று அறிந்தேன்.வாழ்த்துதல் மட்டும் அல்ல் வாழ்த்தப்படுதலும் உற்சாகப் படுத்தும்.முக்கியமாக 'நினைவு கூர்தல்' அவர்களே மறந்து போனதை நாம் ஞாபகத்தில் கொண்டு வாழ்த்தும் போது அவர்கள் எத்தனை மகழ்ச்சி அடைகிறார்கள். பணம் காசு செலவு பண்ண வேண்டாம் உங்கள் மீது அக்கறை இருக்கு நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று காட்டுவது கோடி கொடுப்பதற்கு சமம்.
பிற்கென்ன 'கௌசி ஆன்ட்டி'யை எல்லோருக்கும் பிடிக்கும் இரகசியம் தெரிந்து விட்டதா?
வசூல் ராஜா M.B.B.S B படத்தில் கமல் கட்டிப்புடி வைத்தியம் செய்வார்.ஹாஸ்பிட்டல் சுத்தம் செய்யும் தொழிலாளி மனம் உருகி சந்தோஷப்படுவார்.
அது போல இன்னுமொரு சின்ன விஷயம்[வைத்தியம்] நினைவு கூர்தலும் வாழ்த்துதலும்
நம்மை சுற்றி இருக்கும் நண்பர்கள்,உறவினர்கள் பிறந்த நாள்,திருமணநாள்,மேலும் பல முக்கியமான நாட்கள் நினைவு கூர்ந்து வாழ்த்துங்கள் எத்தனை மகிழ்ச்சி அடைவார்கள்
ஒவ்வொரு வருடமும் நான் பணிக்கு சேர்ந்த நாளை என் சக ஆசிரியர் நினைவு கூர்ந்து வாழ்த்தும் போதும் என் மாணவ்ர்கள் ஆசிரியர் தின வாழ்த்து சொல்லும் போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்.
என் வீட்டில் வேலை செய்த பிள்ளைக்கு ஒருநாள் இனிப்பு தந்து வாழ்த்தினேன் ."அக்கா இன்று என்ன ? என் பிறந்தநாள் கூட
எனக்கே தெரியாதே" என்றாள்.
இருக்கட்டுமே இன்று நீ எங்கள் வீட்டுக்கு வந்த நாள் என்றதும் அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு விலையே இல்லை
நான் இன்னும் கொஞ்சம் ஓவரான 'லொல்லு பார்ட்டி'.
எங்கள் வீட்டு செல்ல நாய்க்குட்டி ஸாரி...ஜீனோ அவன் பெயர்[சுஜாதாவின் என் இனிய இயந்திரா ஜீனோ வால் ஈர்க்கப்பட்டு வைத்த பேர்].அவன் பிறந்த நாள் கூட ஞாபகப்படுத்தி மகழ்வேன்
என்னுடன் பணிபுரியும் நண்பர்கள்,உறவினர்,அண்டை அயலார்
இவர்களை வாழ்த்தும் போது உருகித்தான் போவார்கள்.
இந்த உளவியல் ரீதியான அணுகுமுறையை நான் எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை.என் மாமியாரிடமிருந்துதான்
கற்று அறிந்தேன்.வாழ்த்துதல் மட்டும் அல்ல் வாழ்த்தப்படுதலும் உற்சாகப் படுத்தும்.முக்கியமாக 'நினைவு கூர்தல்' அவர்களே மறந்து போனதை நாம் ஞாபகத்தில் கொண்டு வாழ்த்தும் போது அவர்கள் எத்தனை மகழ்ச்சி அடைகிறார்கள். பணம் காசு செலவு பண்ண வேண்டாம் உங்கள் மீது அக்கறை இருக்கு நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று காட்டுவது கோடி கொடுப்பதற்கு சமம்.
பிற்கென்ன 'கௌசி ஆன்ட்டி'யை எல்லோருக்கும் பிடிக்கும் இரகசியம் தெரிந்து விட்டதா?
Monday, December 11, 2006
கனவு மெய்ப்படுமா???
பாரதியின் பிறந்தநாள் இன்று..
வருடத்தில் ஒரு முறை மட்டுமே நினைவிற்கு வரும் நாட்கள் சில..
டிசம்பர் 11 பாரதியும்
அக்டோபர் 2 காந்தியும்
நவம்பர் 14 நேருவும்
செப்டம்பர் 15 பெரியாரும்,அண்ணாவும்
வருடம் ஒருமுறை மட்டுமே நினைக்கப்படுவார்கள்.
விடுமுறைக்காக அம்பேத்கார்,காமராசர் போன்றோர் பிறந்த நாட்களும்,
சுதந்திர தினமும்,குடியரசு தினமும் நினைவு கோரப்படும்
இல்லையென்றால்,இந்த அவசர யுகத்தில் என்றோ மறந்திருப்போம்
சரித்திர பாடத்தில் பார்க்காவிட்டால்,அவர்தம் முகம் கூட நினைவிருக்காது நமக்கு...
சூப்பர் ஸ்டார்,சுப்ரீம் ஸ்டார்,இளைய தளபதி,காதல்மன்னன்,அல்டிமேட் ஸ்டார்களின் பிறந்த நாட்களை கொண்டாடவும்,கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யவே நம் மக்களுக்கு நேரம் போதவில்லை பாவம்...
இதில் பாரதி கனவு நனவாகும் என்று கனவு காண்கிறோம்....
நல்ல கூத்து போங்கள்.......
வருடத்தில் ஒரு முறை மட்டுமே நினைவிற்கு வரும் நாட்கள் சில..
டிசம்பர் 11 பாரதியும்
அக்டோபர் 2 காந்தியும்
நவம்பர் 14 நேருவும்
செப்டம்பர் 15 பெரியாரும்,அண்ணாவும்
வருடம் ஒருமுறை மட்டுமே நினைக்கப்படுவார்கள்.
விடுமுறைக்காக அம்பேத்கார்,காமராசர் போன்றோர் பிறந்த நாட்களும்,
சுதந்திர தினமும்,குடியரசு தினமும் நினைவு கோரப்படும்
இல்லையென்றால்,இந்த அவசர யுகத்தில் என்றோ மறந்திருப்போம்
சரித்திர பாடத்தில் பார்க்காவிட்டால்,அவர்தம் முகம் கூட நினைவிருக்காது நமக்கு...
சூப்பர் ஸ்டார்,சுப்ரீம் ஸ்டார்,இளைய தளபதி,காதல்மன்னன்,அல்டிமேட் ஸ்டார்களின் பிறந்த நாட்களை கொண்டாடவும்,கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்யவே நம் மக்களுக்கு நேரம் போதவில்லை பாவம்...
இதில் பாரதி கனவு நனவாகும் என்று கனவு காண்கிறோம்....
நல்ல கூத்து போங்கள்.......
Thursday, December 07, 2006
Wednesday, December 06, 2006
ஓர் கவிதை
ரோஜாவுடன் ஓரு நாய்ககுட்டி
அதன் அழகும் மணமும் புரியாமலே
முட்களை மட்டும் உணருமோ
மனிதன் கையில் வாழ்க்கையும் அப்படியே
அன்பு நட்பு தியாகம் புரியாமல்
வலிகள் மட்டும் அறிகிறோம்
வாழ்ககையை வெறுக்கிறோம்
மாறுவோமே-------
Subscribe to:
Posts (Atom)

