Monday, January 29, 2007

சத்தியத்தின் வயது நூறு

மகாத்மாகாந்திஜி தொடங்கிய சத்யாகிரக போராட்டத்தின் வயது நூறு.இதை இரண்டு நாள் விழாவாக இன்றும் நாளையும் தில்லியில் கொண்டாடுகிறார்கள்.
இதைப் போற்றும் முகமாக பல்வேறு கல்வி நிறுவனங்களில் இன்று தீண்டாமை உறுதிமொழி எடுக்கப் பட்டது.
இந்நாளில் மார்ட்டீன் லூதர் கிங்கின் ஒரு கவிதை..இதோ

''சம வாய்ப்புக்கான கனவு
சொத்துக்கள் சமமாக பங்கீடு
செய்வதற்கான கனவு
ஒரு சிலர்மட்டுமே சுகபோகத்தில் வாழாதிருக்கும் கனவு
ஒரு மனிதனின் நிறங்கொண்டு
அவன் குணத்தை அளவிடாதிருக்கும் கனவு
நாட்டின் வளங்கள் அனைத்தும்
ஒரு சிலரின் உரிமையாகாமல்
மனுக்குல மேம்பாட்டிற்கான
கருவியாகும் கனவு
ஒவ்வொரு மனிதனும் மாண்போடும்
முழு ஆளுமையோடும் வாழ்வதற்கான கனவு
.... ..... ....... ....... ....... ....... ...... என்று
மக்களை பாகுபடுத்தாத கனவு.....
மார்ட்டின் லூதர்கிங்

No comments:

Post a Comment