Friday, March 30, 2007

கல்வி நிலையங்களா..கொலைக் கூடாரங்களா?

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.
கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான்கள் கொலைகாரக் கொடூரனாகிவிடுகின்றனர் பல நேரங்களில்.
இரண்டு தினங்களுக்கு முன் அண்ணாமலை பல்கலை பொறியியற்புல மாணவியின் தற்கொலையும் அது தொடர்பான செய்திகளும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
காப்பியடித்ததால் பிடிபட்டு அவமானத்தில் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப் பட்டாலும்,ஆசிரியரின் தவறான செயலே காரணம் என்கின்றனர்.சோதனத் தேர்வின் போது காப்பியடிப்பதாக சந்தேகப் பட்ட ஆசிரியர் மாணவியின் ஓவர் கோட்டில் கைவிட்டு 'பிட்' எடுப்பதாக் கூறி முறைகேடாக நடத்திய அவமானம் மாணவியின் உயிருக்கு உலையானதாகவும் பேச்சு.
இதனால் கொதிப்படைந்த மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு,பல லட்சம் மதிப்புள்ள பொருட்களுக்கு சேதம் விளைவித்திருக்கின்றனர்.
கல்விக்கூடங்கள் என்பவை கல்வியோடு பண்பையும்,ஒழுக்கத்தையும்,கட்டுப்பாட்டையும் வளர்க்கவே என்ற சூழல் மாறி, படிக்கப் போகும் பிள்ளைகள் படித்து முடித்து முழுதாகத் திரும்புவார்களா என்ற அச்சமே இப்போது பிரதானமாகி விட்டது.
ஆசிரியர்களின் கவனக் குறைவினால் பிஞ்சிலே கருகிய நூற்றுக்கனக்கான கும்பகோணம் குழந்தகளை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது.
பள்ளிச் சுவர் இடிந்து விழுந்து பலி,மேற்கூறை விழுந்து பலி என இன்னமும்,இன்னமுமே தொடர்ந்து கொண்டுதானிருக்கிற்து.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு மாணவர்களின் உயி பறிக்கும் எமனாக மாறி வருகின்றனர்.
தன் வகுப்பு மாணவியின் பணம் திருடு போனதால் சந்தேகப் பட்டு துணிகளைக் களைய வைத்து அவமானப் பட்ட ஒரு 6ம் வகுப்பு மாணவி விஷம் அருந்திச் சாவு
ஆசிரியர் கண்மண் தெரியாமல் அடித்த்தால் மாணவன் சாவு
ஆசிரியர் அசிங்கமாகத் திட்டியதால் மனம் உடைந்து தற்கொலை.
ஒரு தொழிற்கல்வி பள்ளியில் மாணவருக்கு வந்த வேலை வாய்ப்புக்கான உத்தரவை ,மாணவன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால் ஆசிரியர் தர மறுத்ததால் மாணவர் விஷம் குடித்து மரணம்.
தன்னைக் காதலிக்க மறுத்த சக மாணவியைத் துரத்தியடித்ததில் மாடிப் படிகளில் உருண்டு வீழ்ந்து மரணம்.
பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் பட்டு கொலையான மாணவி கிணற்றில் மிதந்தார்.
இப்படி ஒன்றல்ல பலப் பல என அடுக்கிக் கொண்டே போகலாம்.
எங்கே போய்க் கொண்டிருக்கிறது கல்வியின் தரம்.அந்தக் காலகுருகுல முறையில் கற்பிக்கப் பட்ட ஒழுக்கம்,பண்பாடு,கலாச்சாரம்,விசுவாசம் கிஞ்சித்தும் இந்த கனிணி யுகத்தில் இல்லை.
தனிமனித காழ்ப்புணர்ச்சிகளும்,பாலியல் வன் கொடுமைகளும்,கலாச்சார சீர்கேடுகளுமே
பிரதானப்பட்டு கல்விக் கூடங்கள் கொலைகாரர்களின் கூடாரமாகி வருகிறது.
'சொன்ன பேச்சு கேட்கவில்லையென்றால் தோலை உரித்துவிடுங்கள்,என்று மிரட்ட ஆசிரியர்களுக்கு பெற்றோரே அனுமதி வழங்கியது ஒரு காலகட்டம். மாணவர்களை சொந்தப் பிள்ளைகளாகப் பாவித்து உரிமையெடுக்க தரப்பட்ட அனுமதி.
இன்றோ சொந்த விறுப்பு,வெறுப்புக்காக மாணவர்கள் கொடுமைப் படுத்தப் படுவதைத் தடுக்க அரசே சட்டம் இயற்ற வேண்டிய கட்டாய சூழ்நிலை.
ஆயிரம் கனவுகளோடு ,மிகுந்த சிரமப்பட்டு படிக்கக் கிடைக்கும் வாய்ப்பைத் தொடர முடியாமல் இன்னும் எத்தனை 'சேத்னா'க்களும்,'நாவரசன்'களும் கொல்லப் படுவார்கள் என்று அச்சமாக இருக்கிறது.
ராகிங் என்ற பெயரில் ஆரம்பித்த கொடுமைகள் நீண்டு,பாலியல்,விரோதம்,காதல்தோல்வி என் கிளைப் பரப்பி விஷ விருட்சமாக வேறுன்றி விட்டது.இதில் ஆசிரியர்களும் தம் பங்கிற்கு குரோதம் பாராட்டி சிக்கலை அதிகமாக்குகின்றனர்.
விடலைப் பருவத்திற்கே உரித்தான அவசர புத்தி,நிலையற்ற மனோபாவம் மாணவர்களை சில வினாடி உந்துதலில் உயிரை மாய்க்கும் முடிவிற்கு தள்ளிவிடுகிறது.
இதுநாள் வரைப் போற்றிப் பாதுகாத்த பெற்றோர்,அரிதாகக் கிடைத்த கல்வி வாய்ப்பை மறந்து விட்டு யாரோ ஒரு சிலரின் பேச்சுக்கும்,ஏச்சுக்கும் அவமானப் பட்டு உயிரை மாய்க்கும் அவலம் பெருகி வருகிறது.
உடனடித்தேவை சட்டங்கள் மட்டும் அல்ல முறையான வழி நடத்துதலும்.
பரஸ்பர புரிந்து கொள்ளுதலும்,செய்யும் தொழிலைத் தெய்வமாக மதிக்கும் போக்கும் வரும்வரை எந்த சட்டங்களும் நிலையான தீர்வளிக்க முடியாது.

4 comments:

  1. do you blame all teachers are culprits.it is a teacher's duty to prevent malpracticing.how could he be blamed like this

    ragu

    ReplyDelete
  2. தப்பு செய்வதைக் கண்டிக்க ஆசிரியருக்கு உரிமை உண்டு ,ஆனால் ஆசிரியரே தப்பு செய்தால்?

    ReplyDelete
  3. பெண்கள் கோழைகளாக இருக்கும்வரை இதுதான் நிலைமை

    ReplyDelete
  4. நன்றி லலிதா நீங்கள் சொல்வது மிகச்சரி.

    ReplyDelete