Monday, December 25, 2006

புத்தாண்டே வருக! பொலிவுடனே வருக!!வருக2007

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

புத்தாண்டு என்றாலே மகிழ்ச்சி,எதிர்பார்ப்பு,நம்பிக்கை.
பழைய ஆண்டின் விரும்பத்தகாத நிகழ்வுகளோ,கசப்போ இந்த ஆண்டும் தொடரக்கூடாது என்பதே அனைவரின் தலையாய விருப்பமாக அமையும். பழைய ஆண்டைவிட இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவோம்.
புத்தாண்டு பிறப்பின் வரலாறு பலவாறாகக் கூறப்படுகிறது.
பூத்துக் குலுங்கும் மலர்கள்,செழித்து விளைந்த பயிர்கள்,பழுத்துத் தொங்கும் கனிகள் யாவும் வசந்தத்தின் வரவுக்கு கட்டியம் கூறும் காலமே ஒரு புதிய ஆண்டின் துவக்கமாக கருதப்பட்டு வந்தது.பின்னாளில் வருடத்தின் துவக்கமாக ஜனவரி1 புத்தாண்டு தினமானது.பழமையை விடாது ஏப்ரல் 1 ஐ புத்தாண்டாக கொண்டாடியவர்களை கேலி செய்து வந்ததுதானாம் 'முட்டாள்கள் தினம்' .
பண்டைய நாட்களிலேயே புத்தாண்டு பல நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே கொண்டாடப் பட்டிருக்கிறது.
வட்டவடிவ பொருட்களை உண்பது ,பயன்படுத்துவது ஆண்டின் முழுமையைக் குறிப்பதாகவும்,முட்டை கோஸின் இலைகள் பணத்தாள்களை போல செல்வ செழிப்பைக் குறிப்பதாகவும் நினைத்தனர்.நள்ளிரவு 12 மணிக்கு 12 திராட்சை பழங்களை உண்பதும்,அரிசி சோறும் கூட அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப் பட்டது.
இன்றைய காலகட்டத்தில் நாம் என்ன செய்கிறோம்?
புது வருடத்துவக்கத்தில் கிடைக்கும் அத்துனை அதிர்ஷ்டமும் ஆண்டு முழுதும் நிலைக்க வேண்டும் என்று விரும்புவோம்.ஆடை அணிகலன்கள்,தள்ளுபடி எனக் கூவி அழைக்கும் விளம்பரங்கள் தெரிந்தே ஏமாறும் நாம் வாங்கும் பொருட்கள் என ஒவ்வொரு புது வருடமும் நல்ல துவக்கமாகவே இருக்கும்.
வாழ்த்துக்களுக்கும் ,வாழ்த்து அட்டைகளுக்கும் முன்னுரிமை இருந்த போதிலும்,கை பேசி குறுஞ்செய்திகளும்,,ஈ கார்டு வாழ்த்துக்களும்,மின்னஞ்சல்களும் அவற்றை புறம் தள்ளி முன்னிற்கும்.
இவையனைத்துக்கும் மேலாக தங்கள் அபிமான நடிகர்களின் திரைப்படவெளியீடும் அதை அன்றே பார்ப்பதுதான் தன் பிறவிப்பயன் என்போரும் உண்டு
நள்ளிரவு பார்ட்டிகள்,டிஸ்கொதெ போன்ற மேல்நாட்டு கலாச்சாரமும் நாம் விட்டு வைப்பதில்லை.
இத்துடன் அவரவர் வசதிக்கு ஏற்ப குடும்பத்தினருக்கோ,காதலருக்கோ,நண்பர்களுக்கோ உயர் அதிகாரிகளுக்கோ நம்மால் முடிந்தபரிசளிப்புகளும் உண்டு.
இந்த கோலாகலங்கள் முடிந்த பிறகு பெரும்பாலனோர் மனதில் எடுக்கும் தீர்மானம் இந்த வருடத்திலிருந்து ஒழுங்காக 'டையரி' எழுத வேண்டும் என்பது.
தீவிரமாக எழுத ஆரம்பிப்போம் ஆனால் எத்தனை நாள்வரைஎன்று நமக்கே தெரியாது.வருடம்365 நாட்களும் தவறாது யாரேனும் எழுதி இருந்தால் சொல்லுங்கள் தலை வணங்குகிறேன்
இது போகட்டும் இந்த 'புது வருட தீர்மானங்கள்' எப்படி?
இந்த வருடம் முதல்,அதைச்செய்யமாட்டேன்[குடி,புகை]
இதை தவறாமல் செய்வேன்[டையரி] போன்ற
சில 'தீய விட்டொழித்தல்களும்' பல நல்ல 'ஆரம்பித்தல்களும்' அரசியல்வாதிகளின் வாக்குறுதியாய்த்தானே போகின்றன.
ஒவ்வொரு வருடமும் நாம் வாங்கும் டைரியில் சில பக்கங்களே எழுதப்பட்டு பின் பிள்ளைகள் கிறுக்கவோ,வீட்டம்மா பால்,சலவை கணக்கு எழுதவோ பயன்பட்டு வருட முடிவில் பழைய பேப்பர்காரனிடம் தஞ்சம் அடைகிறது. நானும்
ஒருமுறை வருட கடைசியில் இப்படி எழுதினேன்:
"வீணாய்ப் போனது டைரியின் தாள்கள் மட்டுமில்லை
என் வாழ்க்கையின் நாட்களும் தான்"
எனக்கு நேரமே கிடைப்பதில்லை என்ற பிரம்மாஸ்திரம் உள்ளவரை நாம் தப்பித்துக் கொள்ளலாம்.
போனது போகட்டும்...இதுவரை
வாருங்கள் இனி என்னசெய்யலாம் இந்த புத்தாண்டிலிருந்து என்று யோசிப்போம்.
சின்ன சின்னதாக நம்மால் முடிந்தவரை...
நம் குடும்பத்தாருக்கு...
நம் நண்பர்களுக்கு......
நம் அண்டை அயலாருக்கு...
நாம் வாழும் ஊருக்கு.....
நம் நாட்டுக்கு......
இயற்கையை காக்க சுற்று சூழலுக்கு.......
எடுப்போமே புது தீர்மானங்களை இந்த புது ஆண்டிலிருந்து.......

4 comments:

  1. ந்ம்பிக்கைதான் வாழ்வின் ஆதார சுருதி.
    புத்தாண்டு நலமாக இருக்க நம்புவோமாக வேண்டுவோம்

    ReplyDelete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. the diary matter is true.i have never completed writting my diary for the fast few years. let me try it atleast in 2007.

    ReplyDelete