Saturday, August 09, 2008

சிரிக்க...சிந்திக்க..இரசிக்க

மூன்று பேராசிரியர்கள் ஒரு நீர் வீழ்ச்சியைப் பார்க்க பிக்னிக் போனார்கள்.

ஒருவர் இயற்பியல் பேராசிரியர் அவர் சொன்னார்,'நான் இந்த நீரின் வேகத்தையும் அதிலிருந்து கிடைக்கக் கூடிய ஆற்றலையும் கணக்கிட விரும்புகிறேன்' என்று சொல்லியபடியே நீர் வீழ்ச்சியில் குதித்து விட்டார்

இரண்டாவது ஆள் கணிணி வல்லுனர். அந்த நீர்வீழ்ச்சியின் அழகை கிராபிக்ஸில் காட்டப் போகிறேன் என்றபடியே அவரும் குதித்து விட்டார்

மூன்றாவது நபர் ஒரு வேதியியல் பேராசிரியர்.மற்ற இரண்டு பேரும் குதித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியும் வெளியே வராததால் தன் குறிப்பேட்டை எடுத்து இப்படி எழுதினார்

'இரண்டு பேராசிரியர்களும் தண்ணீரில் கரையக் கூடியவர்கள்'


ஒரு வயதான மனிதர் டாக்டரிடம் போனார்.
'டாக்டர் என் கண்ணைச் சுற்றி கருவளையம் புள்ளிகள் ஈறூKKஊ'
டாக்டர் சொன்னார்,'வயசானா அப்படித்தான் வரும்'
வயதானவர்:'எந்த சாப்பாடும் ஒத்துக்கலை'
டாக்டர்:'அதுவும் வயசானதால் தான் உங்க செரிமான திறன் குறைஞ்சிருக்கும்.
வயதானவர்:எனக்கு முதுகு வலி'
டாக்டர்:'வயசாயிடுச்சில்ல'
'என்ன எதுக்கெடுத்தாலும் வயசாயிடுச்சினு சொல்றீங்க எனக் கோபப்பட்டார்.
டாக்டர் சொன்னார்,'கரெக்ட் இதுதான் அறிகுறி.உங்க உபாதையைச் சொன்னாக்கூட ஒத்துக்க மாட்டேன் என்கிறீர்களே இதுதான் வயசானதின் அறிகுறி'



ஒரு கணிணி மாணவர் திரைப் படம் தயாரித்தால் எப்படி பெயர் வைப்பாராம்?இப்படித்தான்..

7 GB ஹார்ட் டிஸ்க் காலனி
புதுக்கோட்டையில் இருந்து வைரஸ்
காலமெல்லாம் ஆண்ட்டி வைரஸ் வாழ்க
வைரஸை வேட்டையாடு விளையாடு
சொல்ல மறந்த பாஸ்வேர்டு
ஒரு மவுஸின் கதை

2 comments:

  1. :-)

    கணிணித் திரைப்படங்கள், கலக்கல்.:)

    ReplyDelete
  2. மூன்றாவது ஓகே. மற்றவை ...மொக்கை

    ReplyDelete