Saturday, August 16, 2008

வலியும்,வலிநிவாரணிகளும்

வலியும் வலி நிவாரணியும் என்று சொன்னதும் வழக்கம் போல ஏதோ மருத்துவக் கட்டுரை என நினைப்பீங்க.
உடல் வலிக்கு எந்த மருந்துக் கடையிலும் மாத்திரை கிடைக்கும்.
ஆனால் மனவலிக்கு ஏது மாத்திரை.
மனவலி எப்போது ஏற்படுகிறது.நாம் ஆசைப்பட்டபடி ஏதும் நடக்கவில்லையென்றாலோ அல்லது வாழ்க்கையில் பல சோதனைகளைச் சந்திக்க நேர்ந்தாலோ மனதில் ஏற்படுகின்ற பாரம் அயர்ச்சியே மனவலியாகும்.
எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது வாழவே பிடிக்கவில்லை என்ற எண்ணமும் அல்லது தற்கொலைக்கான முயற்சியும் கூட ஆளாளுக்கு மாறுபடும்.
மன வலியின் வேதனை அதிகமா கொஞ்சமா என்பது அந்த வேதனையின் தன்மையில் மட்டுமல்ல நாம் அதை எப்படி அணுகுகிறோம் என்பதிலும் அடங்கியுள்ளது.
கையளவு உப்பை ஒரு டம்ளர் நீரில் கரைத்துப் பருகினால் உப்பின் சுவை கரிக்கும்.ஆனால் அதே உப்பை ஒரு ஏரியில் கரைத்துப் பருகினால் உப்பின் தன்மையே தெரியாது.
உப்பின் அளவு ஒன்றாயினும் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் அதன் சுவை மாறுபடுவது போல தோல்வி அல்லது வேதனையின் தாக்கமும் நாம் எப்படி அதை அணுகி சூழ்நிலைகளைச் சமாளிக்கிறோம் என்பதில் மாறுபடுகிறது.
ஒவ்வொருவருமே ஆசைப்பட்டது கிடைக்கனும் என்று நினைப்போம்.ஏதோ அதிசய அலாவுதீன் மாய விளக்கு கொடுப்பது போல வாழ்க்கையில் கேட்டதெல்லாம் கிடைக்கனும்.அது கடவுளின் கருணை என்றும் ,கிடைக்காத போது கடவுளுக்கு கருணையே இல்லையென்றும் புலம்புவோம்.
கேட்டதெல்லாம் தானாகவே கிடைக்க வாழ்க்கையென்ன மாய விளக்கா இல்லை அலாவுதீன் பூதமா?
ஆசைப் படுதல் தப்பில்லை. ஆனால் அதை அடைய நாமென்ன முயற்சி செய்திருக்கிறோம் என்பதே கேள்வி.
இந்த வாழ்க்கை நம்முடையது.இதில் ஏற்படும் எல்லாவற்றிற்கும் நாமே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை உணர்ந்தால் வலிகளை மாற்றி சாதனைகளாக்க முடியும்.
முதலில் வலிகளுக்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.
மனிதர்களா?
சூழ்நிலைகளால் ஏற்படும் மாறுதல்களா?
நிகழ்வுகளா எனப் பார்த்தால்
முதலில் மனிதர்களால் ஏற்படும் வலிகள்
யாரும் நமக்கு வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வலி ஏற்படுத்துவதில்லை .சிலநேரம் அப்படி நேர்ந்தாலும் ,பல நேரங்களில் இவர்கள் நமக்கு வேண்டியவர்கள் அறியாமல் செய்து விட்டார்கள் என்ற மன்னிக்கும் பாங்கு இருந்தால் வலியின் அளவு குறைந்துவிடும்.
நிகழ்வுகள் என்பது நம் பிரயத்தனத்திற்கு அப்பாற்பட்டவை.நம் கை மீறிய செயல்களோ ,இழப்புகளோ நம்மால் ஏற்படுவதில்லை.அதிலிருந்து மீண்டு வர வேண்டுமே தவிர வருத்தப் பட்டுக் கொண்டிருந்தால் வலி மிகவேச் செய்யும்
சூழ்நிலைகளையும் குறை சொல்லாமல் அந்த எங்கு தப்பு நடந்தது அதை எப்படிச் சரி செய்தால் நல்லது என்று உணர முற்படனும்.
வலிக்கிறதே எனப் புலம்பால் அதிலிருந்து விட்டு ஒதுங்கி நின்று அதன் காரணகாரியங்களை நோக்கும் போது வலியின் தன்மை குறைவதோடு நம்மிலிருந்து வேறுபட்டு புதிய கோணத்தில் பார்க்க முடியும்.
பொதுவாக மனித மனம் உணர்ச்சிகளால் ஆனாதாகையால் எல்லா வலிகளுக்குமே அவையே காரணமாகின்றன.
நம்மை ஆட்டிப் படைக்கும் உணர்ச்சிகளின் கலவையை நேர்மறையாகவும் அல்லது எதிர்மறையாகவும் வகைப் படுத்தலாம்.
ஏலை வாய்ப்பு,உடல்நலம்,வெற்றிகள்,இலாபம் இவை நேர்மறையான உணர்ச்சிகளாக சந்தோஷத்திற்கு அடிகோலும் என்றால்,
தோல்விகள்,வேதனைகள்.இழப்புகள்,அவமானம் போன்றவை எதிர்மறை உணர்ச்சிகளாக மனதின் வலியை அதிகரிக்கச் செய்யும்.
நம்மைச் சுற்றி நிகழும் எல்லாவற்றிற்கும் நாமே காரணம்.

ஒரு தோல்வியை நிகழ்வை எப்படி எதிர் கொள்கிறோம் எப்படி சீர்தூக்கிப் பர்க்கிறோம் என்பதில்தான் மன வலிக்கான மருந்து இருக்கிறது.
ஒவ்வொரு செயலிலும் உள்ள திட்டமிடுதல்,அதைப்பற்றிய முழுமையான அறிவு,முழு ஈடுபாடு,நேர ஒழுங்கு இவைகளை வளர்த்துக் கொண்டு
மனதில் உள்ள தாழ்வு மனப் பான்மை,இதைச் செய்ய முடியுமா என்ற பயம்,தகுதிக்கு மீறிய முயற்சி இவைகளைக் களைந்து ஒரு வேலையில் மனம்,சிந்தனை ,ஆன்மா மூன்றையும் ஒருங்கிணைத்து முழுமையாக ஈடுபடும்போது வெற்றி நிச்சயம்.

தோல்வியே வந்தாலும் சூழ்நிலைகளை ஆராய்ந்து தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து அடுத்த முறை புது உத்வேகத்துடன் தன்னம்பிக்கையுடம் செயல்படும் போது பழைய வலிகள் மறைந்து மனநலம் பெருகும்.

3 comments:

  1. நல்ல ஆக்கபூர்வமான பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. நன்றி நாமக்கல் சிபி
    மங்களூர் சிவா

    ReplyDelete